தமிழ் வீரன் வீரப்பனாருக்கு நினைவு மண்டபம்

veerappanசேலம், அக். 20- தமிழ் வீரன் வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அவரது உடல் மனைவி முத்துலட்சுமியிடம் வழங்கப்பட்டு பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள மூலக்காட்டில் புதைக்கப்பட்டது.

வீரப்பனின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவனது சமாதியில் அஞ்சலி செலுத்திய முத்துலட்சுமி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தனது கணவரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் அமைக்க திட்டமிட்டதாக தெரிவித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கர்நாடக போலீசாரால் தான் கைது செய்யப்பட்டதால் அது முடியாமல் போனதாக அவர் கூறினார். எனினும் விரைவில் தனது கனவை பூர்த்தி செய்ய உள்ளதாக முத்துலட்சுமி கூறியுள்ளார்.

வீரப்பனின் 10வது நினைவு தினத்தையொட்டி சுமார் 300 பேர் அவனது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

TAGS: