மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறிய கெராக்கான் உறுப்பினர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

 

Gerakan Tan lai Soonநேற்று கெராக்கான் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன் இன்று அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் தமது உரையில் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களைக் கண்டித்ததுடன் மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறினார்.

டான் லாய் சூன் அவரது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அக்கட்சி அவருக்கு காரணம் கோரும் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது. பதில் அளிக்க அவருக்கு 14 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கத் தவறினால் டான் லாய் சூன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

டான் லாய் சூன் கூறிய கருத்தால் சஞ்சலமடைந்துள்ள அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம் என்று கட்சியின் துனைத் தலைவர் சியா சூன் ஹை கூறினார்.

பெம்பெலா என்ற 52 மலாய்-முஸ்லிம் கூட்டணி டான் லாய் சூன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.