அமைச்சரவை ஏஜி-க்காக முடிவு செய்வதில்லை

cabinetமலாய்மொழி  பைபிள்களை  எரிக்கப்போவதாக  மிரட்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிமீது  நடவடிக்கை  எடுப்பதில்லை  என்பது  அமைச்சரவை  செய்த  முடிவு  அல்ல  என்கிறார் பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி.

அவிவகாரம்  பற்றி  தாமும்  போக்குவரத்து  அமைச்சரும்   முரண்பாடான  அறிக்கைகளை  வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதில்   உண்மையில்லை   என்று  அவர் கூறினார். அவ்விவகாரத்தில்  அமைச்சரவை எந்த  முடிவையும்  எடுக்க  முடியாது.

அது பற்றி  அமைச்சரவையில்  விளக்கமளிக்கப்பட்டது,  அவ்வளவுதான்.

“அமைச்சரவை  ஏஜி-க்காக  முடிவெடுக்க முடியாது.

“ஏஜி  சட்டப்படி  நடந்துகொள்கிறார். ஏஜிக்கு  நாங்கள்  உத்தரவு  போடக்  கூடாது. அப்படிச்  செய்தாக்   அவரது  பொறுப்பில்  தலையிடுவதாகக்  குறை  கூறுவார்கள்”, என்றவர்  சொன்னார்.