நாடாளுமன்றத்துக்கு முழுமையான சீரமைப்பு தேவை

saifuசட்ட முன்வடிவுகளைக்  கொண்டுவந்து  அவற்றை  நிறைவேற்றுமுன்னர் அவை  பற்றிப்  பொதுமக்களின் கருத்தைத்  தெரிந்துகொள்வது  முக்கியம்.  அதற்கேற்ப நாடாளுமன்றத்தை  முழுமையாக  சீரமைக்க  வேண்டும்  என்று முன்னாள்  உயர்கல்வி  துணை  அமைச்சர்  சைபுடின்  அப்துல்லா  முன்மொழிந்திருக்கிறார்.

புதிதாகக்  கொண்டுவரப்படும்  சட்டங்கள்  பற்றியோ  திருத்தங்கள்  பற்றியோ  எம்பிகளுக்கு, பிஎன் கட்சியினர்  உள்பட, விளக்கம்  அளிக்கப்படுவதில்லை.

“எடுத்துக்காட்டுக்கு 1950, சாட்சிய  சட்டத்தின்  பகுதி 114ஏ-க்குத்  திருத்தங்கள் மொண்டுவரப்படப்போவது  எங்களுக்குத்  தெரியாது”, என  முன்னாள்  தெமர்லோ  எம்பி-ஆன  அவர்  தெரிவித்தார்.

“மறுநாள்  காலையில்  பக்கத்தான்  எம்பிகள்  அது  பற்றிப்  பேசியபோதுதான்  அறிந்து  கொண்டோம்”, என்றாரவர்.