காஷ்மீர் இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ்-வுடன் தொடர்பா? முதல்வர் விளக்கம்

is_flag_001காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் கொடியுடன் சென்ற இளைஞர்களுக்கும், அந்த இயக்கத்துக்கும் தொடர்பில்லை என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன் ஐம்மு- காஷ்மீரில் பக்ரித் தொழுகை முடிந்தவுடன், சில இளைஞர்கள் பேரணியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் சென்றனர்.

இந்த சம்பவம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் என இந்திய இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், காஷ்மீரில் ஐ.எஸ். கொடியுடன் சுற்றிய இளைஞர்களை மாநில காவல்துறை விசாரணை நடத்தியது.

விசாரணையில் இளைஞர்கள் பயங்கரவாத பின்னணி கொண்டவர்கள் இல்லை என்றும், அவர்களுக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், எதற்காக அவர்கள் ஐ.எஸ். கொடியுடன் சென்றனர் என்பது குறித்த விவரம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று கூறியுள்ளார்.

TAGS: