வடமாகாணசபையில் இனப்படுகொலை தொடர்பில் பிரேரணையை கூட்டமைப்பு அங்கீகரிக்காது – ஆங்கில ஊடகம்

tna_logoதமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பில் வடமாகாணசபையில் பிரேரணை சமர்ப்பிக்கக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் விசேட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த பல தசாப்தகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையை மறுக்கமுடியாது.

ஆனால் இது தொடர்பில் வடமாகாண சபையோ வேறு எந்த தரப்பினரோ பிரேரணைகளை முன்வைப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது.

தற்போது சிறிலங்காவின் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான பிரேரணைகள் அந்த விசாரணையை பலவீனப்படுத்துவதாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: