இலங்கை மற்றும் மாலைத்தீவு கடல் வழியாக புதிய சில்க் பாதையால் இந்தியாவின் செல்வாக்கு பாதிக்காது! – சீனா

chinavsindiaகடல் வழியாக புதிய சில்க் பாதையை இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு ஊடாக கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கு பாதிக்கப்படாது என சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் கம்யூனிஷக் கட்சியை மேற்கோள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

சீனாவின் சில்க் பாதை திட்டம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது எனவும், அது பாதுகாப்பை மையமாகக் கொண்டது அல்ல என்றும் சீனாவின் பொதுக்கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவன பிரதிப் பணிப்பாளர் லுவான் ஜியான்சங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார்.

TAGS: