தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசிய ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_leader_001ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்-சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ரக்கா (Raqqa) நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தங்களை எதிர்பவர்களையும், இஸ்லாமிய கொள்கைகளையும் கடைப்பிடிக்க தவறியவர்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடனடியாக கொன்றுவிடுகின்றனர்.

சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக போர் புரியும் இராணுவ வீரர்களை கடத்தி வந்து, அவர்களின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மேலும் அவர்களின் தலை துண்டித்த சடலங்களை ரக்கா நகரில் பொதுமக்கள் நடமாடும் சாலையிலேயே வீசியுள்ளனர்.

இந்நிலையில் இந்த தலையில்லா பிணங்களை பார்த்து அவ்வழியே செல்லும் பெண்களும் சற்றும் பதற்றமடையாமல், கூச்சலிடமால் மிகவும் சாதாரணமாய் நடந்து செல்வது அதிர்ச்சியை அளிக்கிறது.

இதுகுறித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்களது கொள்கைகளுக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாமல் எங்களை எதிர்த்து போராடினால் இதே கதி எல்லோரும் எனவும் எச்சரித்துள்ளார். -http://world.lankasri.com