பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் சாவு

Taliban-Fighters1பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படையினர் திங்கள்கிழமை நடத்திய அதிரடித் தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு வஜிரிஸ்தான் பகுதியானது ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து பல தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், விமானப் படையும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மலைப்பிரதேசங்களில் பயங்கரவாதிகள் அமைத்துள்ள பதுங்கு குழிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் குண்டுமழை பொழிந்தனர்.

இந்தத் தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பயங்கரவாதிகள் பயன்படுத்திய 9 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டுள்ளன.