எம்எச்17: காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்படுவர்; பிரதமர் உறுதி

Najib - Human Rightsமலேசிய  விமான  நிறுவனமான  எம்எச்17-ஐ  சுட்டு வீழ்த்தியவர்களை  நீதிமுன்  நிறுத்தாமல்  விடப்போவதில்லை  என்பதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உறுதியாக  இருக்கிறார். ஆனால், உக்ரேனில்  தொடர்ந்து  சண்டை  நடப்பதால்  விமானம்  விழுந்த  இடத்துக்குச் செல்வது  தடைப்பட்டிருப்பதாக  அவர்  சொன்னார்.

காணாமல்போன  எம்எச் 370  பற்றியும்  அடுத்த  சில  மாதங்களில்  தகவல்கள்  கிடைக்கக்கூடும்  என்றவர்  எதிர்பார்க்கிறார்.

டூபாயில்,  ராய்ட்டர்ஸுக்கு  வழங்கிய  நேர்காணலில்  நஜிப் இவ்வாறு  தெரிவித்தார்.

“அது (எம்எச்17 புலனாய்வு) அதற்குப் பொறுப்பானர்கள்  நீதிமுன்  நிறுத்தப்படும்வரை  தொடரும்”, என்றாரவர்.