சைபூல் ஆதரவாளர்கள்: காசுக்காக வரவில்லை, நீதி வேண்டி வந்தோம்

supportபுத்ரா ஜெயாவில்,  நீதி மாளிகைக்கு  வெளியில்  சைபூலுக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  கூட்டம்  நேற்றைவிட  இன்று  அதிகமாக  இருந்தது.

நேற்று  சுமார்  100  பேர்  காணப்பட்ட இடத்தில்  இன்று  சுமார்  200  பேர்  திரண்டு, “அன்வாரைக்  கைது  செய்!  குதப்புணர்ச்சி  செய்தவரைக்  கைது  செய்!”, என்று  கூச்சலிட்டனர்.

பணத்துக்காக  மாரடிக்கும்  கூட்டம்  என  பிகேஆர்  ஆதரவாளர்கள்  கூறியிருப்பதை  அவர்கள்  மறுத்தனர்.

“என்ன  வேண்டுமானாலும்  சொல்லிக்கொள்ளட்டும். அது  அவர்களின்  உரிமை. ஆனால், உண்மை  என்னவென்றால், நீதி  வேண்டும். அதற்காகத்தான்  இங்கு  வந்திருக்கிறோம்”,  என்று  அவர்களில் ஒருவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.