ஜிஎல்சி-கள் பல பில்லியன் ரிங்கிட் கடன் பட்டுள்ளன ஆனால் புத்ரா ஜெயா கண்டுகொள்வதில்லை

glcதனியார்  நிறுவனங்கள்  அரசாங்கத்துக்கு  செலுத்த  வேண்டிய  பெரும் தொகைகளை  உள்ளடக்கிய  கடன்கள்  இன்னும்  செலுத்தப்படாமல்  இருப்பதை வெளிச்சம்  போட்டுக்காட்டிய  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங், அரசு-தொடர்புடைய  நிறுவனங்களின்(ஜிஎல்சி)  நிலவரமும்  அதேதான் என்கிறார்.

அவை அரசாங்கத்திடம் பட்டுள்ள  பல  பில்லியன்  ரிங்கிட்  கடன்களை  இன்னும்  திருப்பிக்  கொடுக்கவில்லை. புத்ரா  ஜெயாவும்  வரவேண்டியதைத்  திரும்பப்  பெற  முயற்சி  செய்வதாக தெரியவில்லை.

ஆனால், சாதாரண  மலேசியர்கள்  தேசிய  உயர்க்கல்வி கடனுதவி  நிதியிடம்  வாங்கிய  கடன்களைத்  திரும்பப்  பெறுவதில்  மட்டும்  அரசாங்கம்  தீவிரம்  காட்டுகிறது  என  ஒங்  கூறினார். இவர்களின் கடன்களை  நிறுவனங்களின்  கடன்களுடன்  ஒப்பிட்டால் இது  மிகச் சாதாரணமானது.

“2012  முடிய  இந்நிறுவனங்கள்  அரசாங்கத்திடம் பட்டிருந்த  கடனின் அளவு ரிம4.5 பில்லியன்”, என்றவர்  கூறினார்.

அந்நிறுவனங்களில்   இண்டா வாட்டர்  கொன்சொர்டியமும்  ஒன்று. அது ரிம2 பில்லியனுக்குமேல்  அரசாங்கத்துக்குக்  கொடுக்க  வேண்டும். ஆனால், ‘சல்லி  காசுகூட’  இதுவரை  திருப்பிக்  கொடுத்ததில்லை  என ஒங்  கூரினார்.