எம்பி: சமூக ஊடகக் குற்றவாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க வேண்டும்

caningசமூக ஊடகக்  குற்றவாளிகளுக்கு  சிறைத்தண்டனை  கொடுப்பதும்  அபராதம்  விதிப்பதும்  போதாது. தண்டனையைக் கடுமையாக்கி  பிரம்படியும் கொடுக்க  வேண்டும்  என  பிஎன்  எம்பி  ஒருவர்  நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தினார்.

அஹ்மட்  லாய்  பூஜாங்(பிஎன் -சிபுட்டி)  முன்வைத்த  இப்பரிந்துரையை  அவரின்  சகா  தியோங்  கிங்  சிங் (பிஎன் -பிந்துலு) ஆதரித்தார்.

“இதையும்  சட்டத்தில் சேர்த்துக்  கொள்ள  வேண்டும்”, என அஹ்மட்  கூறினார்.

அதற்குப்  பதிலளித்த  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப், ஊடகக்  குற்றவாளிகளைச்  சட்டப்பூர்வமாக தண்டிக்கும்  அதிகாரம்  தம்  துறைக்குக்  கிடையாது  என்றார்.