70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

70_killed_001சிரியாவில் 70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தினந்தேறும் பல தலைத் துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர்.

தற்போது வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் (Idlib) நகரை கைப்பற்றுவதில் தீவிமாக உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மேலும் அங்கு புதிதாக திறக்கப்பட்ட ஆளுநர் மாளிகையை கைப்பற்ற முயன்றபோது, அங்கு அவர்களை எதிர்த்து போரிட்ட ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.

இதனையடுத்து தங்களது முகாம்களுக்கு சுமார் 70 இராணுவ அதிகாரிகளை அழைத்து சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ், அவர்களின் தலையைத் தண்டிததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இட்லிப் நகரின் பெரும்பாலான பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியிலுள்ளதாகவும், அங்கு பல அரசு கட்டிடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. -http://world.lankasri.com