செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவேன், நம்பிக்கையுடன் அன்வார்

 

Anwar free on tuesday1வெள்ளிக்கிழை தொழுகைக்காக புத்ரா ஜெயாவில் மஸ்ஜித் துவாங்கு மிஸான் ஸைனால் அபிடின் நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்வார் இப்ராகிம்மை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு “ரிபோமாஸி” என்று முழக்கமிட்டதால் அங்கு ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது.

அவரது ஆதரவாளர்களிடம் இரு நிமிடங்களுக்கு பேசிய அன்வார் செவ்வாய்க்கிழமை வாக்கில் தாம் விடுவிக்கப்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். வழக்கு வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மாறி மாறி வந்து போய் கொண்டிருக்கின்றன.

“கடவுள் கிருபையால், திங்கள்கிழமை வழக்கைத் தொடர்வோம், கூடுமாயின் செவ்வாய்க்கிழமை. (நம்பிக்கையோடு) நான் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவேன்”, என்று அன்வார் கூறினார்.