மலேசிய பிணையாளியைக் கொல்லப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்

hostageபிலிப்பின்சில்  மலேசியர்  ஒருவரைக் கடத்திவைத்துள்ள  தீவிரவாதிகள், நவம்பருக்குள்  பிணைப்பணம்  கொடுக்காவிட்டால்  அவரைக்  கொல்லப்போவதாக  மிரட்டியுள்ளனர்.

தம்  கணவர்  சான்  சாய்  சியும்  உடல்நலம்  குன்றியிருப்பதாக  முஸ்லிம்  தீவிரவாதிகள்  என்று  சந்தேகிக்கப்படும்  கடத்தல்காரர்கள்  தெரிவித்ததாக  சின்  பெக்  இங்குயென்  சாபாவில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

சான்,  ஜூன்  மாதம் சாபா, குனாக்  நகரில்  அவருடைய  மீன் வளர்ப்புப்  பண்ணையில்  இருந்தபோது  அபு  சயாப்  கிளர்ச்சிக்காரர்கள்  என  ஐயுறப்படுவோரால்   கடத்திச்  செல்லப்பட்டார். அவர் பிலிப்பின்  தீவான  ஜோலோ-வுக்குக்  கொண்டு செல்லப்பட்டார்.

அவரை  விடுவிக்க  கடத்தல்காரர்கள்  ரிம3 மில்லியன்  கேட்பதாக  அவரின்  மனைவி  கூறினார்.