எப்பவும் அன்வார்தானா? ஆஸி முன்னாள் நீதிபதி கேட்கிறார்

evattஎலிசபெத் இவாட் ஆஸ்திரேலியாவின்    கூட்டரசு  நீதிமன்றத்தின்  முதலாவது  பெண்  நீதிபதியாகப்  பணியாற்றி  ஓய்வு  பெற்றவர். 81-வயதான  அந்த  அம்மையார்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி வழக்கைப்  பார்ப்பதற்காக  மலேசியா  வந்துள்ளார்.

அவருக்கு  ஒன்று  புரியவில்லை. இந்தக்  குதப்புணர்ச்சி  சட்டம்  எப்போதுமே  எதிரணித்  தலைவரைக்  குறி  வைத்தே  பாய்கிறதே அது ஏன்  என்பது  அவருக்கு  விளங்கவில்லை.

அச்சட்டத்தின்கீழ்  வேறு  யாரும்  குற்றம்  சாட்டப்படுவதாகத்  தெரியவில்லையே,  பெரும்பாலும்  அன்வார்தான்  மாட்டிக்கொள்கிறார்  என  புத்ரா  ஜெயாவில்,  செய்தியாளர்களிடம்  பேசியபோது  அவர்  கூறினார்.