ஐஜிபி: அமைச்சரின் கூற்றை மறுக்கிறேன்; சாபாவில் எல்லாம் பாதுகாப்பாகவே உள்ளது

igpசாபாவில்  நிலவரம்  பாதுகாப்பாக  இல்லை  என்று  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அசீஸ்  கூறியிருப்பதை  இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  ஒத்துக்கொள்ளவில்லை.

அதற்கு  மாறாக, அடிக்கடி  கடத்தல்  சம்பவங்கள்  நிகழ்ந்த  நிலை  மாறி இப்போது  அம்மாநிலம்  பாதுகாப்பாக  உள்ளது, சுற்றுப்பயணிகளும் தொடர்ந்து  குவிகிறார்கள என்றாரவர்.

“சாபாவில்  பாதுகாப்பு  இல்லை  என்று  சொல்ல  மாட்டேன். சாபா, அதிலும்  குறிப்பாக  அதன்  கிழக்குக் கரை  பாதுகாப்பாக  இருப்பதற்கு  நடவடிக்கை  எடுத்தோம்,  தொடர்ந்து  எடுத்துக்கொண்டும்  வருகிறோம்.

“சுற்றுப்பயணிகளுக்கு  மட்டுமல்லாமல்  உள்ளூர்வாசிகளுக்கும்  சாபா பாதுகாப்பான  இடம்தான்”, என  காலிட்  கூறினார்.