எம்ஏசிசி அதிகாரிகளைத் தண்டிக்கச் சொல்லி தியோ குடும்பத்தினர் நஜிப்புக்குக் கோரிக்கை

teohதியோ  பெங்  ஹொக்-கின்  இறப்புக்குக்  காரணமானவர்களைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தண்டிக்க  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன் டிஏபி  எம்பிகள்  உள்பட, 40-க்கு  மேற்பட்டவர்கள்  இன்று நாடாளுமன்றத்தின்  நுழைவாயிலில்   ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

அவர்கள், தியோவின்  இறப்பில் சம்பந்தப்பட்டவர்கள்  என்று  சொல்லப்படும்  மூன்று  அதிகாரிகளின் -சிலாங்கூர்  எம்ஏசிசி  விசாரணைப் பிரிவுத்  தலைவர் ஹிஷாமுடின்  ஹஷிம், விசாரணை  அதிகாரி  முகம்மட்  அனுவார்  இஸ்மாயில், உதவி  சுப்பிரெண்டெண்ட  முகம்மட்  அஷ்ரப்  முகம்மட்  யூனுஸ்- உருவப்படங்களையும்  ஏந்தி இருந்தனர்.

தியோ பெங்  ஹோக்-கின்  பெற்றோர்களும்  அங்கிருந்தனர்.
லிம் கிட் சியாங்  உள்பட  டிஏபி  எம்பிகள்  சிலரும்  கூட்டத்தில் காணப்பட்டனர்.