ரோன்95 விலை குறைவதாக அம்னோ பேரவையில் அறிவிப்பீர்

fuelஅடுத்த  வார  அம்னோ  பேரவையில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரோன்95  மற்றும்  டீசல்  விலைகள்  குறைக்கப்படுவதாக  அறிவிக்க  வேண்டும்.  தவறினால்  டிசம்பர்  31-இல்  மாபெரும்  ஆர்ப்பாட்டத்தை  எதிர்நோக்க  வேண்டியிருக்கும்.

இவ்வாறு  எச்சரித்த  பாண்டான்  எம்பியும்  பிகேஆர்  தலைமைச்  செயலாளருமான  ரபிஸி  ரம்லி, அம்னோ  தலைவர்  அவ்வாறு  அறிவிப்பது பொதுமக்களிடையிலும்  கட்சியிலும்  சரிந்துவரும்  செல்வாக்கை  நிமிர்த்தி  வைக்க உதவும்  என்றார்.

டிசம்பர்  31 ஆர்ப்பாட்டம்  வெற்றிகரமாக  அமைவதை  உறுதிப்படுத்த  தம்  கட்சி  விளக்கக் கூட்டங்கள்  வழியாகவும்  சமூக  வலைத்தளங்களிலும்  ஆதரவுதேடும்  இயக்கமொன்றை  மேற்கொண்டிருப்பதாகவும்  ரபிஸி தெரிவித்தார்.

ரோன்97-இன்  விலையைக்  குறைத்ததுபோல்  ரோன்95-இன்  விலையும்  குறைக்கப்பட  வேண்டும்  என்றாரவர்.