வேள்பாரி: மஇகா தலைவர் இனியும் பதவியில் இருக்க தகுதி இல்லை

vellpariபகாங்  சுல்தானின்  கடுங்கோபத்துக்கு  ஆளான  மஇகா  தலைவர் ஜி.பழனிவேல் பதவி  விலகுவதே  நல்லது.

இவ்வாறு  வலியுறுத்திய அக்கட்சியின்  வியூக  இயக்குனர்  வேள்பாரி, சுற்றுப்புற  அமைச்சராக  இருக்கும்  தகுதி  பழனிவேலுக்கு  இல்லை  என்றும்  கட்சித்  தலைவர்  என்ற  முறையிலும்  தவறுக்குமேல்  தவறு  செய்து  வந்திருக்கிறார்  என்றும்  குற்றச்சாட்டுகளை  அடுக்கினார்.

“பழனிவேல்  ஏதோ  நோயினால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்  என்ற  சந்தேகம்  மஇகாவில்  உள்ள  எங்களுக்கு  நீண்ட  காலமாகவே  உள்ளது. அதனால்தான்  அவரால்  அவருடைய  கடமையைச்  சரிவர  செய்ய  முடியாதிருக்கிறது”, என  வேள்பாரி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“நேற்று  சுல்தானின்  கேமரன்  மலை  வருகையின்போதுகூட  அதன்  எம்பி-ஆன  அவர்  அங்கில்லை. இது  ஒரு  நடைமுறை  மீறல்  என்பதுடன்  ஆட்சியாளரை  அவமதிப்பதும்  ஆகும்.

“மஇகா  தலைவர்  மறதி  குணமுள்ளவர்  என்பதும்  அடிக்கடி  சோர்ந்து  போவதும்  அனைவரும்  அறிந்ததுதான்”, என  வேள்பாரி கூறினார்.