பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டது

 

ktmb reinstatesவேலைநிறுத்த மறியலில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால், அவர்களுடமைய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில் காரணம் கோரும் கடிதம் பெற்றவர்களும் அடங்குவர் என்று கேடிஎம்பியின் தலைவர் நாவாவி அஹ்மட் கூறினார்.

ஆனால், அவர்கள் மீண்டும் தங்களுடைய பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர் கேடிஎம்பி தயாரித்துள்ள ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட வேண்டும் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரான நவாவி கூறினார்.