போலீசை இழிவுபடுத்தியவருக்கு ரிம10,500 அபராதம்

carபோலீசாரை  இழிவுபடுத்தி  முகநூலில்  பதிவிட்ட  கார்  விற்பனையாளர்  ஒருவருக்கு மலாக்கா  மெஜிஸ்திரேட்  நீதிமன்றம் ரிம10,500 அபராதம்  விதித்தது.

செப்டம்பர் 25-இல்,  கடமைச்  செய்துகொண்டிருந்த  இரு  போலீஸ்  அதிகாரிகளை  இழிவுபடுத்தி  முகநூலில் பதிவிட்டதை  டான்  கெங்  ஹொங்  ஒப்புக்கொண்டார்.

காலை  மணி  9.30க்கு  அவர்கள்  கடமையில் இருக்கும்  படத்தைப்  போட்டு அவர்களை  இழிவுபடுத்தும்  கருத்துகளையும்  அவர்  பதிவிட்டிருந்தாராம்.

டான் அபராதத்  தொகையைச்  செலுத்தினார்.