1எம்டிபி விவகாரத்தில் டோனி புவாவை நஜிப் மிரட்டுகிறார்

 

Najib threatens Tonyஅரசுக்குச் சொந்தமான 1மலேசியா டிவெலப்மெண்ட் பெர்ஹாட் பற்றி டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தெரிவித்திருந்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக பிரதமர் நஜிப் மிரட்டியுள்ளார்.

ஒரு யுடியூப் வீடியோ பதிவில் டோனி நஜிப்பின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டோனியிடம் சார்வு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வீடியோவின் தலைப்பு “டோனி புவா: மலேசிய வரலாற்றிலேயே நடந்திராத மிகப் பெரியMinister -Subar, Tony GST2 அவமானச் செயலை செய்து வருகிறார் நஜிப்” என்று கூறுகிறது. அந்த வீடியோ நவம்பர் 3 இல் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு டிஎபி நிதி திரட்டும் நிகழ்ச்சியின் போது பதிவு செய்யப்பட்டது.

டோனியிடம் சார்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தில் டோனி எழுத்து மூலமாக மன்னிப்பு கோர வேண்டும் என்பதோடு அவரது அவதூறான அறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.