அம்னோ தலைவர்: சரியாகத்தான் சொன்னார் தெங்கு அட்னான்

alhabsheeஅம்னோ  பேரவையில்  பேராளர்கள் மற்ற  இனத்தவரின்  மனத்தைப்  புண்படுத்தும்  பிரச்னைகளைத்  தொடாமலிருப்பது  நல்லது;  ஆனால்,  மலாய்க்காரர்  தொடர்பிலான  விவகாரங்களைத்  தாராளமாக விவாதிக்கலாம்.

இவ்வாறு  அறிவுறுத்திய  செராஸ்  அம்னோ  தொகுதித் தலைவர்   சைட்  அலி  அல்ஹப்ஷி,  நேற்று  கட்சித்  தலைமைச்  செயலாளர் தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  வலியுறுத்திய  ஒன்றைத்தான்  தாம்  திரும்பவும்  எடுத்துரைப்பதாகக்  கூறினார்.

“பேராளர்கள்  தங்குதடையின்றிப்  பேசலாம். ஆனால், உணர்ச்சிவசப்பட வைக்கும்  விவகாரங்களை  விவாதிக்கும்  அளவுக்குச்  சென்று  விட  வேண்டாம்  என்று  அவர்(தெங்கு  அட்னான்)  கூறியது  சரியே”, என்றாரவர்.