பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கவும்! வைகோவை கைது செய்யவும்!- சுப்பிரமணிய சுவாமி

vgo_prabaதமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க.வை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் 256ன்படி மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயற்படக்கூடாது.

பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சுப்பிமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது. -http://www.tamilwin.com

TAGS: