மீன் வாங்க சென்ற 48 வியாபாரிகளை சுட்டுக்கொன்ற போகோ ஹராம் தீவிரவாதிகள்

boko_haram_nigeriaநைஜீரியாவில் 48 மீன் வியாபாரிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

நைஜீரியாவில் அட்டூழியம் புரிந்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், வடகிழக்கு நைஜீரியா மற்றும் சாட் நாட்டு எல்லைப்பகுதியை வழிமறித்தனர்.

இவர்கள், அங்கிருக்கும் மீன்பிடி கிராமமான டோரான் பாகா பகுதிக்கு வியாபாரத்துக்காக மீன் வாங்கச் சென்ற 48 பேரை கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com