ஷரிசாட்: மலாய்க்காரர்-அல்லாதாரின் குடியுரிமை பற்றிக் கேள்வி எழுப்பாதீர்

sharizatமலேசியாவில்  பிறந்த  சீனர், இந்தியர்  குடியுரிமை  பற்றி  அம்னோ  உறுப்பினர்கள்  கேள்வி  கேட்கக்  கூடாது  என  அம்னோ  மகளிர்  பகுதித்  தலைவர் ஷரிசாட்  அப்துல்  ஜலில்  வலியுறுத்தினார்.

“இந்நாட்டில்  ஆதியில் வந்த  நம்முடைய சிறப்புரிமைகள்  பற்றி  அவர்கள்  கேள்வி  கேட்காதவரை  நாமும் இந்நாட்டின்  குடிமக்களாகிய  அவர்களின்  உரிமையை  மதிக்க  வேண்டும்”, என   அம்னோ  மகளிர் பகுதியின்  ஆண்டுக்  கூட்டத்தில்  கொள்கையுரை  ஆற்றியபோது  அவர்  குறிப்பிட்டார்.