கடுமையான பாதுகாப்புச் சட்டங்களுக்கு ஆதரவு தாரீர்: எம்பிகளுக்கு நஜிப் வேண்டுகோள்

paperஇன்று  நாடாளுமன்றத்தில்,  அனைத்துலக  இஸ்லாமிய தீவிரவாத  கூட்டமைப்பான  இஸ்லாமிய  அரசின் (ஐஎஸ்)  மிரட்டல்மீது  வெள்ளை  அறிக்கை  தாக்கல்  செய்த   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், கடுமையான  பாதுகாப்புச்  சட்டங்கள் தேவை  என்றும்  அவற்றுக்கு  நாடாளுமன்றம்  ஆதரவளிக்க  வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

இஸ்லாமிய  அரசின்  மிரட்டலை  எதிர்கொள்ளல்’  என்ற  தலைப்பைக்  கொண்ட  அவ்வறிக்கை   அன்னிய  போராளிகளைக் கையாள  புதிய  சட்டம்  தேவை  என்று  குறிப்பிட்டது.

புதிய  சட்டம்  வெளிநாட்டுக்  கும்பல்களுடன்  சேர்ந்து   போராடும்  மலேசிய  போராளிகளைக்   கவனித்துக்கொள்ளவும்  நாடு  திரும்பிய  பின்னர்  அவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கவும்  வகை  செய்யும்.

திரும்பிவரும்  போராளிகள்  மலேசியாவில்  தீவிரவாத  நடவடிக்கைகளைத்  தூண்டிவிடலாம். உள்ளூரில்  தாக்குதல்களை  நடத்தலாம்  என்றும்  அது கூறிற்று.