அஸ்மின்: ‘அவமதிக்கப்பட்ட’ பிஎன் பிரதிநிதிகள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்

allocateரிம2.4மில்லியன்  ஒதுக்கீட்டை  நிராகரித்த சிலாங்கூரின்  பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்கள், உண்மையில்  பக்கத்தான்  ரக்யாட்  அரசுக்கு  நன்றி  கூற  வேண்டும்  என்கிறார்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி.

அவர்கள்  ஒதுக்கீட்டைப்  புறந்தள்ளியிருந்தாலும்   மாநில  அரசு ஆளுக்கு  ரிம200,000  கொடுப்பதைத்  தொடரும்  என்றாரவர்.

பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  ரிம200,,000  கொடுப்பதுபோக  ஒவ்வொரு  தொகுதிக்கும்  மாநில  ஒருங்கிணைப்பாளர்  மூலமாக  மேலும் ரிம500,000  வழங்கப்படும்  என  அஸ்மின்  கூறினார்.

“அந்த வகையில்  ஒவ்வொரு  தொகுதிக்குமே  ரிம700,000 கொடுக்கப்படும். நாங்கள்   தோற்ற  தொகுதிகளில்  மட்டும்  அவற்றின்  பிஎன்  சட்டமன்ற  உறுபினர்களுக்கு ரிம200,000 கொடுக்கப்படுகிறது. ரிம500,000 (மாநில) ஒருங்கிணைப்பாளரிடம்  கொடுக்கப்படுகிறது”, என்றாரவர்.