மலாய்காரர்களின் நம்பிக்கையை அழித்த பின்னர் அவர்களைக் கைதூக்கிவிடுவது எப்படி?

ambikaமலாய்க்காரர்களுக்கு   தான்  ஒரு  வரமா,  சாபமா?  என ஈக்காத்தான்  முஸ்லிமின் மலேசியா மலேசியா (இஸ்மா) தன்னைத்  தானே  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என  நெகாரா கூ  அமைப்பின் புரவலரான  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  கூறியுள்ளார்.

அந்த  அமைப்பு  மலாய்க்காரர்கள்  முற்றுகைக்கு  ஆளாகியிருப்பதுபோன்ற  சிந்தனையைத்  தொடர்ந்து  பரப்பிவருவது  அவர்களின்  முன்னேற்றத்துக்கு  உதவுகிறதா  அல்லது  அவர்களை முன்னேற விடாமல்  பிடித்து  வைத்துக்கொண்டிருக்கிறதா  என்பதை  அது  தீர  ஆராய  வேண்டும்.

“ஒரு சமூகத்திடம்  அது  தாக்குதலுக்கு  இலக்காகியிருப்பதாக சொல்லிச்  சொல்லி  அவர்களின்  நம்பிக்கையைக்  குலைத்துக்  குழப்பிய பின்னர்  அவர்களைக்  கைதூக்கிவிடுவது  எப்படி?”, என்று  அம்பிகா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.