தினேஷா குடும்பத்தினர் சுகாதார அமைச்சரைச் சந்தித்தனர்

tinashaஜி.தினேஷாவின்  சாவுக்கு  மருத்துவமனையின் அலட்சியம்தான்  காரணம்  என்று  கூறிவரும்  அவரின்  குடும்பத்தார்  இன்று  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியத்தை புத்ரா  ஜெயாவில்  உள்ள  அவரது  அலுவலகத்தில்  சந்தித்தனர்.

அவர்களிடம்  அமைச்சர்  தம்  அமைச்சில் இயங்கும்  தனியார்  மருத்துவ  சிகிச்சை கட்டுப்பாட்டுப்  பிரிவிடம் (யுகேஏபிஎஸ்)  புகார்  செய்யுமாறு  கூறினார்.

அவர்களும்  அவ்வாறே  செய்தனர்.

யுகேஏபிஎஸ்  இயக்குனருடன்  அக்குடும்பத்தார்  இரண்டு  மணி  நேரம்  கலந்துரையாடியதாக  தினேஷாவின்  உறவினர்  ரமேஷ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“யுகேஏபிஎஸ் அவ்விவகாரம்மீது  விரிவாக  விசாரணை  செய்யும்  என இயக்குனர்  கூறினார்”, என்றாரவர்.