பல்டி அடித்த நஜிப்மீது பாய்கிறார் அன்வார்

anvதேச  நிந்தனைச்  சட்டம் தொடர்பில் அளித்திருந்த  வாக்குறுதியை மீறிவிட்டார்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சாடியுள்ளார்,

“தேச நிந்தனைச்  சட்டத்தைத்  திருத்தப்போவதாக  சொன்ன  நஜிப் வாக்குறுதியை  மீறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

“அச்சட்டத்தைப்  பயன்படுத்தி  சுதந்திரத்தைக்  கட்டுப்படுத்தவும்  எதிர்ப்புகளை  ஒடுக்கவும்  விரும்பும்  வலச் சாரிகளாகவும்  தீவிரவாதிகளாகவும்  கருதப்படும்  தரப்பினரின்  அழுத்தங்களுக்கு  அவர்  அடிபணிந்து  விட்டார்”, என  அன்வார்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.