இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மீண்டும் உறுதி: சுஸ்மா

sushma-swaraj_1இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்று இலங்கை மீண்டும் உறுதியளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பிலேயே இலங்கை இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் லோக்சபாவில் நேற்று அறிவித்தார்.

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செப்டம்பர் 7-13 மற்றும் ஒக்டோபர் 31- நவம்பர் 6 ஆகிய தினங்களில் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமை தொடர்பில் இந்தியா, இலங்கையின் கவனத்துக்கு கொண்டு சென்றது.

இதன்மூலம் இந்தியாவின் அயல்நாட்டில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையை இலங்கையிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தநிலையிலேயே இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை என்று இலங்கை உறுதியளித்துள்ளதாக சுஸ்மா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியா, தமது பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: