சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத எம்.பி.,க்கள் 48 மணி நேரத்தில் வெளியிட வேண்டும்:பிரதமர் மோடி

modi1புதுடில்லி:’இதுவரை, சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத, பா.ஜ., – எம்.பி.,க்கள், 48 மணி நேரத்தில், சொத்து விவரங்களை, பார்லி., இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்’ என, பிரதமர் மோடி, நேற்று காலை, அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 நாட்களுக்குள், எம்.பி.,க்கள் தங்கள் சொத்து கணக்கை, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை நன்கு தெரிந்த பிறகும், நடப்பு, 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, 543 எம்.பி.,க்களில், 400க்கும் மேற்பட்டவர்கள், இன்னமும் தங்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்காமல் உள்ளதாக, கடந்த செப்., 26ல் வெளியான தகவல் தெரிவிக்கிறது.

முக்கியமானவர்கள் : காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்
பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, நிதின் கட்காரி
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பலர்

சமர்ப்பிக்காத பிரபலங்கள்: மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்த்தன், ராதாமோகன் சிங், ஆனந்த் கீதே, ஆனந்த்குமார், கிரண் ரிஜிஜூ, லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், காங்கிரசை சேர்ந்த கேப்டன்அம்ரிந்தர் சிங், வீரப்ப மொய்லி, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே. முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ.,வின் மீனாட்சி லெகி, வினோத் கன்னா, கிரண் கெர், ஹேமமாலினி.

என்னென்ன விவரங்கள் அவசியம்
*உறுப்பினர் பெயர், முகவரி, கட்சி.
*அசையாத சொத்துகள் விவரம் – எப்போது வாங்கப்பட்டது, யார், யார் பங்குதாரர்கள், யார் பெயரில் உள்ளது.
*அசையும் சொத்துகள் விவரம் – பைக், கார், வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்டுஉள்ள முதலீடு.
*எம்.பி.,யின் மனைவி பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகள்.
*எம்.பி.,யின் வாரிசுகள் பெயரில் உள்ள அசையும்,அசையா சொத்துகள்

-http://www.dinamalar.com

TAGS: