பெர்காசா: விசாரணையின்றி காவலும் பிரம்படியும் தொடர்ந்து இருக்க வேண்டும்

aliஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்  இரத்துச்  செய்யப்பட்டாலும்  அதன்  சாரம்  தேச  நிந்தனைச்  சட்டத்தில்  தொடர்ந்து  வாழ  வேண்டும் என பெர்காசா  விரும்புகிறது.

அந்த  வகையில், தேச  நிந்தனைச் சட்டம்  வலுப்படுத்தப்படும்போது  விசாரணையின்றி  காவலில் வைப்பதும்  அதில்  சேர்த்துக்கொள்ளப்பட  வேண்டும்  என  அதன்  தலைவர்  இப்ராகிம்  அலி  விரும்புகிறார்.

இது, பாதுகாப்புப் படைகள்  நாட்டைக் காக்க  நல்ல  கருவியாக  விளங்கும்.

இஸ்லாத்தையும்  மற்ற  சமயங்களையும்  பாதுகாக்க  தேச  நிந்தனைச்  சட்டத்தை  வலுப்படுத்தும்போது  தண்டனைகளையும்  கடுமையாக்க  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டார். ஐந்தாண்டுக் குறையாத  சிறைத்  தண்டனையுடன்  இரண்டு  பிரம்படிகளையும்  சேர்த்துகொள்ள வேண்டும்  என்றாரவர்.