‘குர்ஆன் எரிக்கப்பட்டதாக’ சொன்னவர்மீது போலீசில் புகார்

teoசீனர்கள்  ஒரு வழிபாட்டின்போது  குர்ஆனை  எரித்தார்கள்  என்று  கூறிய பாலிங் அம்னோ  மகளிர் தலைவர்  மஷிடா  இப்ராகிம்மீது  டிஏபி  போலீசில்  புகார்  செய்துள்ளது.

“என்ன  ஒரு பொறுப்பற்ற  பேச்சு”, என  கூலாய்  எம்பி  தியோ நை  சிங்  சாடினார். .

கெடாவில்  அப்படி ஒரு  சம்பவம்  நிகழ்ந்ததாக  அறிவிக்கப்பட்டிருகிறது. அதைச்  செய்தவர்கூட  மனநோயுள்ள  ஒரு  மலாய்க்காரர்.  இதை  கெடா மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரே   தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும்,  குர் ஆன்  எரிக்கப்படவில்லை; கிழிக்கப்பட்டது  என்பதையும்  அவர்  தெரிவித்துள்ளார்.

மஷிடாவை  குற்றவியல்  சட்டத்தின் பகுதி 298(ஏ),  505 ஆகியவற்றின்கீழ்  விசாரிக்க  வேண்டும்  என  தியோ  கேட்டுக்கொண்டார்.