இந்திய பெருங்கடலில் சீன கடற்படை தளங்கள்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

csubmarineபீஜிங்: இந்திய பெருங்கடலில் 18 இடங்களில் கடற்படை தளங்களை சீனா அமைத்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நமிபியா நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று நடத்திய ரகசிய ஆய்வில், இந்திய பெருங்கடலில் இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் சீனா கடற்படை தளங்கள் உள்ளிட்ட பணிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. ஆனால் நீர்மூழ்கி கப்பல்கள், ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு செல்லும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் சீனா சப்பை கட்டு கட்டியது.

இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், ஏமன், ஓமன், கென்யா, தான்சானியா, மொசாம்பிக், செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த கடற்படை தளங்களை சீனா அமைத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய பெருங்கடலில் பெருகி சீன ஆதிக்கம் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது.

TAGS: