இந்நிலை என்று மாறும் என் தோழா – புலவர் கோமகள்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

அந்நிய நாட்டில் பிறந்தோர்  எல்லாம்’
ஐசியொடு அலைகின்றார் 
Stateless-Indiansஇந்நாட்டில் பிறந்தும் ஐசியின்றி அல்லாடும்
நிலையேன் தோழா

ஒருநாளாவது சிந்தித்தாயா  அதற்குத் தீர்வென்ன
ஒருநாட்டில் பிறந்த  எவரும் அந்நாட்டுக் குடிமக்கள்
அன்றோ  அதையேன்  யாரும் உணரவில்லை

பதியவில்லை பதியவில்லை என்றே பழி போடுகின்றீர்
அதனை அரசாங்கம் பதிவு செய்யத் தவறியதேன் என
ஒருமுறையாவது யோசித்தாயா

இந்தியா போன்ற பெரிய  நாடுகளில்  வீட்டுக்கு வீடு
கதவைத் தட்டி புதிதாய்ப் பிறந்த
குழந்தையை பதிவார்கலாம் அங்கு  ஐசியில்லை
ஆயினும் அலட்சியம் இல்லை

இங்கு ஐசி உண்டு  அதை தர அலட்சியமும் உண்டு
இந்நிலை என்று மாறும் என் தோழா

– புலவர்  கோமகள் , கோலாலம்பூர் , மலேசியா

TAGS: