துதிப்பாடல் நூல்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஐஜிபியும் ஜாஹிட்டும் மவுனமாக இருப்பது ஏன்?

hymnஜோகூரில் கத்தோலிக்க  பாதிரியாரிடமிருந்து துதிப்பாடல்  நூல்கள் பறிமுதல்  செய்யப்பட்டது  தொடர்பில்  உள்துறை  அமைச்சர்  அஹ்ட்  ஜாஹிட்  ஹமிடியும்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி)  காலிட்  அபு பக்காரும்  வாயை  மூடிக்  கொண்டிருப்பது  ஏன்  என்று  டிஏபி நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட் சியாங் வினவுகிறார்.

“அவர்களின்  அதிகாரத்துக்கு  உள்பட்ட  விவகாரங்களில்  உடனே  கருத்துச்  சொல்பவர்கள்  இவ்விவகாரம்  பற்றி  10 நாள்களாக  எதுவும்  கூறாதிருப்பது  ஆச்சரியமளிக்கிறது”, என்று  லிம்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

சமய  உணர்வுகளை  மதிப்பதற்குக்  கற்றுத்தரும்  பயிற்சிக்குப்  போலீசாரை  அனுப்பி வைக்க  வேண்டும்  என்றும்  லிம்  கூறினார்.