நிமிர மறுக்கும் வானவில்லே ! -பொன்.ரங்கன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

மழை ஓய்வில் வருவாய் 
rainbow-6துவைக்காமலே காய்வாய்
அலசுகிறாய் மழையில் நீ
அஸ்ட்ரோவும் அப்படிதான் 

சாயங்கள்  அதிகம் 
உன் ஊடகவியலில் தமிழன் 
இன்றும் கருப்பு வெள்ளைதான் 
நீ மாற்றி துவைத்தாலும் 

நிறம்மாறாத என் இனம் 
24 மணி நேரமும் விடியும் வரையும் 
நனைந்து கொண்டே இருக்கிறது 
அசுத்தம் மட்டும் நிற்கிறது 

நீ பாலைவன வறட்சிக்கு போ 
காய்ந்த மணலில் போதிமரம் செய் 
அதுவாவது ஏழாம் அறிவை தரும்
உன்னை நீ நிமிர்த்த பார் 

இனத்தை அறிவில் வளைத்து வா 
போதுமே பேடிகள் பண்ணது 
பணம்தான் உன் கேடித்தனம் என்றால் 
என்னவர்கள் என்ன பாவமோ 

புதிய சமுதாய சேனல் உண்டு 
போய் உன் படிப்பை தொடரு
அஸ்ட்ரோ வான் வில்லியே போ போ 
வசந்தம் மீட்டு வா வா

-பொன்.ரங்கன்

TAGS: