சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார்?

sabahபிகேஆர் இனானாம்  சட்டமன்ற  உறுப்பினர்  ரொலண்ட்  சியா, சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து  விலகப்போவதாக  ஒரு  பேச்சு  அடிபடுகிறது.

அவருடைய  முகநூல்  பக்கத்தில்  பதவி விலகுவதாக ஒரு  குறிப்பு  இடம்பெற்றுள்ளது.

“உடல்நலக்  காரணங்களுக்காக  இனானாம்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து  விலகப்  போகிறேன். கடந்த  17  மாதங்களாக  வாக்காளர்களும்  கட்சித்  தலைமைத்துவமும்  கொடுத்த  ஆதரவுக்கு  நன்றி”, என்றவர்  அதில்  குறிப்பிட்டிருந்தார்.

முகநூல்  செய்தியை  பிகேஆர்  கட்சியும் பார்த்திருக்கிறது. ஆனால், பதவி  விலகல் பற்றி  அதிகாரப்பூர்வமான  தகவல்  எதுவும்  ரொலண்டிடமிருந்து  வரவில்லை  என்று  அது  கூறிற்று.