அம்னோ பேராளர்கள் தப்பு செய்திருந்தால் தேச நிந்தனை வழக்கை எதிர்நோக்குவர்

wanஅண்மைய  அம்னோ  பேரவையில், அம்னோ  பேராளர்கள்  தேச  நிந்தனைக்குரிய  கருத்துகளை  மொழிந்ததாகக்  கண்டுபிடிக்கப்பட்டால்  அவர்கள்மீது  தேச  நிந்தனைச்  சட்டம்  பயன்படுத்தப்படும்  என்று  உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  வான்  ஜப்பார்  கூறினார்.

“அவர்கள்  தவறு  செய்திருந்தால், போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும். மற்றவர்களிடம்  நடந்துகொள்வதைப்போலவே  அவர்களிடமும்  நடந்துகொள்வார்கள்”, என்றாரவர்.

அம்னோ  கூட்டத்தில்  முன்னாள்  துணை  அமைச்சர்  மஷிடா  இப்ராகிம்,  கெடாவில்  சீனர்கள்  குர்ஆனை  எரித்ததாகக்  கூறி  ஒரு  சர்ச்சையை  உண்டுபண்ணினார். பின்னர்  அது  உண்மை  இல்லை  என்பது  தெரிய  வந்தது.

பினாங்கு  அம்னோ  பேராளர்  சைடி  முகமட்  இன்னொரு  சர்ச்சையைக்  கிளப்பினார். பினாங்கில்  உள்ள  சீனர்கள்  ஒழுக்கம்  கெட்ட நடவடிக்கைகள்  ஈடுபட்டதால்தான்  பணக்காரர்களானார்கள்  என்றவர்  கூறினார்.