இந்தியாவின் மீதான தாக்குதல் தொடரும்: தீவிரவாத அமைப்பின் தலைவர் மிரட்டல்!

taliiபுதுடெல்லி : பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம். அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவின் மீதான தாக்குதல் தொடரும் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மிரட்டியுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வருபவர் ஹபீஸ் சயீது. அதேபோல் உலகெங்கும் பல நாடுகளாலும் தேடப்பட்டு வருகிறார். இவருடைய தலைக்கு ரூ.65 கோடியை விலையாக நிர்ணயித்துள்ளது அமெரிக்கா.

மும்பை தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானில் இருக்கும் சயீதை ஒப்படைக்கும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையில் பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் நேற்று ஹபீஸ் சயீது பேசியதாவது: பாகிஸ்தானில் ராணுவப் பள்ளியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாவே காரணம். இதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் தொடரும்.

-http://www.dinakaran.com

TAGS: