பிபிபி: வெறுப்பை உண்டாக்க முனையும் அம்பிகாமீது நடவடிக்கை எடுப்பீர்

pppஅரசாங்கம்  கிறிஸ்துவர்களுக்குத்  தொல்லை  கொடுப்பதை  நிறுத்த  வேண்டும்  என்று வலியுறுத்தும்  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்மீது  சட்ட  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்கிறார்  பிபிபி  தலைவர்  ஒருவர்.

கிறிஸ்மஸ்  நெருங்கிவரும்  வேளையில்  அவர்  அரசாங்கத்துக்கு  எதிராக  வெறுப்பை  உருவாக்க முனைகிறார்  என  ஏ. சந்திரகுமணன்  குற்றம்  சாட்டினார்.

“குடிமக்களிடையே  நல்லிணக்கத்தையும்  ஒற்றுமையையும்  கெடுத்து வெறுப்பை  உருவாக்கும்  அம்பிகாவை  குற்றவியல்  சட்டம்  பிரிவு  298ஏ-இன்கீழ்  விசாரிக்க  வேண்டும்”, என்று  பிபிபி  உதவித்  தலைவரான  சந்திரகுமணன்  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.