பேரனைத் திருப்பிக் கொடுங்கள்: மன்றாடுகிறார் தீபாவின் முஸ்லிம் தாயார்

deepaஎஸ்.தீபாவின்  தாயார்  சித்தி  அய்ஷா  அப்துல்லா, தம்  ஆறு-வயது  பேரனை  அவனின் தாயாரிடமே  ஒப்படைக்க  வேண்டும்  என்று  இஸ்லாத்துக்கு  மதம்  மாறிய  தம் முன்னாள் மருமகன் இஸ்வான்  அப்துல்லாவைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இஸ்வான்  மகனைத்  தன்  வசமே  வைத்திருக்க   செய்திருந்த  மேல்முறையீட்டில்  தோல்வி  கண்டதை  அடுத்து  சித்தி  அய்ஷா  இந்த  வேண்டுகோளை  விடுத்ததாக  த  ஸ்டார் கூறியுள்ளது.

“நீதிமன்றம்  தீர்ப்பளித்து  விட்டது. இஸ்வான்  தீர்ப்பின்படி  நடந்து  கொள்ள  வேண்டும். ஒரு  பிள்ளையை அதன்  தாயாரிடமிருந்து  பிரித்து  வைப்பது  பாவமாகும். அதுவும்  இவ்வளவு நீண்ட  காலத்துக்கு”, என்றவர்  குறிப்பிட்டார்.