மஇகா அடுத்த வாரம் ஆர்ஓஎஸ்-ஸைச் சந்திக்கும்

palaniமஇகாவில்  புதிய  தேர்தல்கள்  நடத்த  வேண்டும்  என்ற  உத்தரவு  பற்றி  விளக்கம் பெறக்  கட்சித்  தலைவர்   ஜி.பழனிவேலும்  துணைத் தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமும்   அடுத்த  வாரம்  சங்கப்  பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச்  சந்திப்பர்.

“சுப்ராவும்  நானும்  அடுத்த  வாரம்  ஆர்ஓஎஸ்ஸைச்  சந்தித்து  அதன்  உத்தரவு  பற்றி  விளக்கம்  பெறுவோம். உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியையும்  சந்திப்போம்”, என்று  பழனிவேல்  கூறினார்.

இன்று நடந்தது  மத்திய  செயல்குழுக்  கூட்டம்  அல்ல  என்றும்  அது  மாநிலத்  தலைவர்களையும்  உள்ளடக்கிய  நிர்வாகக் குழுக்  கூட்டம்  என்றும்   ஆர்ஓஎஸ் விவகாரம் பற்றி  விவாதிக்கவே  அது  கூட்டப்பட்டது  என்றும்  பழனிவேல்  தெரிவித்தார்.

மஇகாவில்  உள்ள  சில  தரப்பினர்  தாம்  பதவி  விலகுவதை  விரும்புவதாகக்  கூறப்படுவதையும்  அவர்  மறுத்தார்.

“சும்மா அப்படிச்  சொல்லப்படுகிறது. ஒரு  சிலரே  அப்படிக்  கூறிக்கொள்கிறார்கள்”, என்றாரவர்.