நோயுற்றிருக்கும் பிகேஆர் பிரதிநிதியின் நிலை கிறிஸ்மசுக்குப் பின்னர் தெரியவரும்

inanamசாபா பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  ரொலண்ட்  சியா  கிறிஸ்மசுக்குப்  பின்னர்  தம்  நிலை  பற்றி  முறையான  அறிவிப்புச்  செய்வார்.

“என்மீது  அக்கறை காட்டும்  ஊடகங்களுக்கும்  நண்பர்களுக்கும் நன்றி. கிறிஸ்மசுக்குப் பிறகு  முறையாக  அறிவிப்பேன்”, என  ரொலண்ட்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

இனானாம் சட்டமன்ற  உறுப்பினரான  அவர்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து  விலகப்போவதைக்  கட்சிக்குத்  தெரியப்படுத்தியிருந்ததாக  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  நேற்று  கூறினார்.

உடல்நிலை  மோசமாக  இருப்பதாக   அவர்  எழுதியிருந்தார்  எனவும் ரபிஸி  தெரிவித்தார்.