மகாதிர்: சான்றோர் 25 பேரின் கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை

letterமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ‘மலாய்  சான்றோர் 25  பேர்’ எழுதிய  கடிதத்தைத்  தாம் இன்னும்  படிக்கவில்லை  என  இன்று  கூறினார்.

“அதை  நான்  படிக்கவில்லை. அது  செய்தித்தாள்களில்  இல்லை.

“அவர்களுக்குப்  பின்னணியில்  இருப்பது  யார்  என்பதும்  தெரியாது”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

சில தரப்புகள்  அவர்தான்  அக்குழுவின்  பின்னே  இருந்துகொண்டு  இயக்குகிறார்  என்று  நம்புவதாகக்  கூறியதற்கு, “என்ன  நடந்தாலும் எல்லாரும்  என்மீதுதான்  பழி  போடுகிறார்கள்”, என்று  மகாதிர்  உரைத்தார்.