‘பெர்காசா உறுப்பினர் கிறிஸ்மஸ் பதாதையைக் கிழித்தது தவறு’

wrongபெர்காசா  பேராக்  டிஏபி  தலைமையகத்துக்கு  வெளியில்  ஆர்ப்பாட்டம்  நடத்தியபோது   ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவர்  அங்கு  தொங்க  விடப்பட்டிருந்த  கிறிஸ்மஸ், புத்தாண்டு  வாழ்த்து  பதாதை   ஒன்றைக்  கிழித்தெறிந்ததை  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கண்டித்தார்.

“மற்றவர்களின்  சமய நம்பிக்கையை  மதிக்க  வேண்டும். நம்  சமயம்  மதிக்கப்பட  வேண்டும்  என்று  விரும்பும்  நாம்  மற்றவர்களையும்  மதிக்க  வேண்டும்  என்பதே  என்  கருத்தாகும்”, என  அமைச்சர்  கூறியதாக  த  ஸ்டார்  கூறியுள்ளது.

“இதேபோல்  மற்றவர்கள்  நமக்குச்  செய்திருந்தால். நமக்கும்  ஆத்திரம்  வரும்தானே”, என்றாரவர்